இந்திய பெண்கள் சொத்துரிமை, 8
1956 சட்டத்தின்படி பெண்களுக்கு உரிமைகொடுத்தபோதும் பலவிதமான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வழியாக தீர்ப்பு 2020 உச்சநீதிமன்றத்தில் முடிவானது ஆகவே 1956 இல் சட்டம் போட்டும் பெண்கள் அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை .இதற்கு எல்லாம் தீர்வாக அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக தமிழ்நாடு அரசு ஆக்ட் ஒன் ஆப்1/ 90 என்ற பெயரில் இந்து வாரிசு உரிமை சட்டத்தில் செக்ஷன் 29 (c) சி படி தமிழ்நாடு அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. ஏனென்றால் பெண்களுக்கு 1956 இல் சொத்துரிமை கொடுத்தும் பலவிதமான சட்ட போராட்டங்களால் அவர்களால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் கோர்ட்டுகளில் வழக்கு தேங்ககி கிடப்பதால் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தும் அவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசு இந்த திருத்தத்தை கொண்டு வந்தது. எப்போதுமே தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றத்தில் 1900 முதற்கொண்டு அக்கறை எடுத்து வந்ததும் அவர்களால் ஆணுக்கு பெண் சமமாக வர முடியவில்லை. கல்வியிலும் பின்தங்கி இருந்தனர். இந்த குறை எல்லாம் போக்க அவர்களுக்கு பொருளாதாரமே பின்புலமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள...