Posts

வெளிச்சம் பரவட்டும் பகுதி 66 ஈசிசேர்

தெலுங்கு பட உலகில் 1952 இல் வெளிவந்த தேவதாஸ் படம் மூலமாக அறிமுகமானவர் சாவித்திரி. முதல் படமே சூப்பர் டூப்பர் படம் என்பதால் அவர் ஒரே இரவில் நட்சத்திரம் ஆகிவிட்டார். பின்பு 1954 இல் தேவதாஸ் படம் தமிழிலும் வெளிவந்தது .படம் அருமையான படம் பாடல்கள் அதைவிட சூப்பர்.  எல்லாவற்றையும் விட சாவித்திரியின் அந்த இளமையான சோகமான முகம் தமிழ் பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. 54 முதல் தெலுங்கிலும் தமிழிலும் தொடர்ந்து படங்கள் வெளிவந்தன. 57 இல் தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து மணந்தார். அவருக்கு இரு குழந்தைகளும் உண்டு .இருந்த போதிலும் அவரது சினிமா நடிப்பிற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. தொடர்ந்து நடித்த அவர் 1961 இல் வெளிவந்த பாசமலர் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடித்து பெரும்புகழ் பெற்றார் .61 முதல் தமிழ் ரசிகர்களின் முதல் நடிகையாக இடம்பெற்றார். அப்போது தமிழ் சினிமா உலகில் பானுமதி பத்மினி போன்ற பிரபல நடிகைகள் இருந்தனர் .ஆனால் சாவித்திரி இடம் ஒரு தனித்துவம் இருந்தது .அவர் பானுமதியை போல் ஒரு தசாவதாரம் இல்லை .ஆனால் சாவித்திரி இடம் ஒரு தனித்துவமான நடிப்பு இருக்கும்.ரசிகர்ளின்  சகோத...

வெளிச்சம் பரவட்டும் பகுதி 65

எனது சிறிய வயதில் பரபரப்பாக பேசப்பட்ட படங்கள் பராசக்தி மதுரை வீரன் நாடோடி மன்னன் இந்த மூன்று திரைப்படங்களை பற்றி அப்போது அதிகமாக பேசுவார்கள் பராசக்தி வந்த வருடம் 1952 மதுரை வீரன்  வந்த வருடம் 19 56 ஆகவே அந்த இரு படங்களையும் நான் சிறிய வயதில் அதிகமாக கேள்விப்பட்டது இல்லை. கொஞ்சம் வயதானபிறகு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகுதான் பராசக்தி படத்தையும் மதுரை வீரன் படத்தையும் தெரிந்து கொண்டேன். 1958 ல் வெளிவந்த படம் நாடோடி மன்னன். இந்த படம் வந்தபோதில் எனக்கு அப்போது சிறிய வயது தான் என்றாலும இந்த படம் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எப்படி என்றால் இந்த படம் வெளிவந்து சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் ஊர் டெண்ட்கொட்டகைக்கு வந்து ரிலீஸ் ஆனது .அப்போது யாரைப் பார்த்தாலும், திமுக வேறு வளர்ந்து கொண்டிருந்த நேரம் எனக்கு இந்த அரசியல் தெரியாது என்றாலும் இப்ப இந்த  படத்தை பார்ப்பதற்கு டென்ட் கொட்டகையில்.அவ்வளவு கூட்டமாக இருக்கும். சாதாரணமாக டென்ட் கொட்டகையில் படம் போட்டால் எங்கள் ஊரில் நான்கு நாட்கள் தான் ஓடும். ஆனால் நாடோடி மன்னன் திரைப்படம் பார்ப்பதற்கு இந்த கிராமங்கள் தோறும் சுற்றுவட்டார ...

வெளிச்சம் பரவட்டும். பகுதி 64

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டை  உலுக்கிய சம்பவம் என்றால் அது 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தான்.அப்போது நான் பியுசி படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல வேண்டும் இந்தி எதிர்ப்புக்காக என்றார்கள். கல்லூரியில் படித்தாலும் இது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது .ஆகவே நாங்களும் எல்லோரையும் போல கூட்டத்தோடு கூட்டமாக சென்றோம். போஸ்ட் ஆபீஸில் மறியல் நடந்தது பெரும் ஊர்வலம் அங்கே அமர்ந்து போராட்டம் நடத்தினோம் .பிறகு போலீசார் வந்து கலைத்தார்கள். அதன்பிறகு தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இப்படி எல்லாம் ஒரு போராட்டம் நடக்கும் என்பதே எனக்கு அந்த வயதில்  எதுவும் தெரியாது .ஆனால் மிகவும் ஒரு உற்சாகமாக தான் இருந்தது. போராட்டத்தில் கலந்து கொள்வது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஓய்ந்துவிட்டது.இதை முன் நின்று நடத்தியது திமுக தான்.நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் இது  மாணவர்களின் போராட்டமாக அமைந்தது .கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலமாக அந்த காலத்தில் பேசப்பட்டது .இந்த மாணவர்களின் தலைவராக ஒ...

வெளிச்சம் பரவட்டும். ஈசிசேர், பகுதி 63

பசுபதி என்கிற என் நண்பன் வக்கீலாக நான் ஜூனியராக இருந்து ஆபீஸில் எனக்கு பின் இரண்டு வருடங்களுக்குபின் வந்தார் .மிகவும் துடிப்பான சுறுசுறுப்பான வக்கீல். ஆரம்பத்திலேயே வக்கீல் தொழிலில் மிகவும் ஆர்வம் உள்ளவர். சொல்லிவிட்டார் நான் கிரிமினல் கோர்ட்டில் பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்று .உடனே அதுவரை கிரிமினல் கோர்ட்   பார்த்துக் கொண்டிருந்த நான் எனக்கு ஒரு மாற்று வந்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் அவரிடம் கிரிமினல் சைடு கட்டுகளை தள்ளிவிட்டு , நான் சிவில்சைடில்  போய் விட்டேன் ஆனால் பசுபதி அவர் தீவிரமாக பிரக்டிஸ் செய்தார் வெகு விரைவில் அவர் தனியாக நடத்தும் அளவுக்கு விறுவிறு என்று வளர்ந்து விட்டார். வருமானத்திலும் கூட நான் சிவில் செயலில் பிராக்டிஸ் செய்ததால் எனக்கு அவ்வளவு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் கிரிமினல் செயலில் விறுவிறு என்று ஒரு சீனியர் லெவலுக்கு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அவரது உழைப்பு அயராத உழைப்புதான் காரணம் அதற்கு. அதுமட்டுமல்லாமல் உழைப்பு மட்டுமல்ல  அதிகமான ஆர்வம் கொண்டவர். இந்த தொழிலில் மேலே வந்து விட வேண்டும் என்று ஆர்வத்திலேயே பிராக்டிஸ் செய்தார்...

வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர் பகுதி 62

திஜாராவின் கதைகளில்  சிலிர்ப்பு என்ற கதை கவனிக்கத்தக்கது. அந்த கதையில் அப்பா தனது மகனை திருச்சி ஜங்ஷனிலிருந்து மாயவரத்துக்கு அழைத்துப் போகிறார் .பையன் தனது மாமா வீட்டில் பெங்களூரில் இருந்து அழைத்துவரப்பட்டு இப்போது மாயவரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் அந்த ட்ரெயினில். . அப்போது அந்த பையன் கேட்கிறேன் அப்பா மாமா நம்மள விட பணக்காரரா அப்பா , அப்பா சொல்கிறார் ஆமாம்பா நம்ம விட பெரிய பணக்காரர். நீஏன் அப்பா என்ன அங்க கொண்டு படிக்க வைத்திருக்கிறாய் அப்படின்னு பையன் கேட்க , நம்மகிட்ட வசதி இல்லப்பா அவர் கொஞ்சம் வசதியா இருக்காரு அதனால உன்னை படிக்க வைக்கிறார் பா . பையன் கேகிறான், ஆனா நான் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் மாமா எனக்கு ஒரு ஆரஞ்சு பழம் வாங்கி கொடு மாமா என்று கேட்டேன் ,ஆனா கடைசி வரைக்கும் அவர் வாங்கிய தரலப்பா அப்படின்னு அந்த பையன் மெதுவா அவங்க அப்பா கிட்ட சொல்றேன். அப்படியா அவர் கவனித்து இருக்க மாட்டார். இல்லப்பா எங்களுக்கு வீட்ல கூட சாதாரண சாப்பாடு தான் போடுவாங்க கொஞ்சம் பழையது கூட போடுவாங்க .அப்படின்னு பையன் சொல்றான். பையன் கேட்டானே எந்து ஒரு மூணு ஆரஞ்சு பழத்தை வாங்கி பையன் தூங்கி எழுந்த...

வெளிச்சம் பரவட்டும் பகுதி,61

சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த பிறகு தனது மகன்களை வீட்டை விட்டு விரட்டி விட்டார் என் தாத்தா என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன் .இந்நிலையில் அவர்கள் வறுமையில் வாடும் போது என் பெரியப்பாவுக்கு 1936 இல் சுயமரியாதை சீர்திருத்த திருமணம் நடந்தது என்பதையும் சொல்லி இருக்கிறேன். அதற்கு அடுத்த வருடம் எனது அப்பா  சீனிவாசனுக்கு திருமணம். அப்போது வேலை வெட்டி இல்லை. வீட்டை விட்டு விரட்டப்பட்டடார்கள். அதனால் பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக எனது அப்பாவின் தாய் மாமனுக்கு பெண்கள் இருந்தார்கள். அதில்  என் அம்மாவை பெண் கேட்டார்கள். அப்போது எங்கள் தாத்தா அம்மாச்சி எல்லோரும் சற்று உயர்வான நிலையில் இருந்தார்கள். தாராசுரத்திற்கு பக்கத்தில் தான் கும்பகோணம் தான் அவர்கள் ஊர். அவர்களிடம் போய் பெண் கேட்டபோது அவர்கள் போட்ட கண்டிஷன் நீங்கள் வைதீக முறைப்படி தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் நாங்கள் பெண் தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள் . எங்கள் ஒப்புக்கொண்டார். திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது . என் பெரியப்பா இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார் . திருமண நாள் முதல் நாளில் இரவு பெண...

வெளிச்சம் பரவட்டும் ஈசிசேர், பகுதி 60

1920 களில் நீதி கட்சி தொடங்கி தமிழகமே பரபரப்பாக இருந்த காலம். அப்போது எனது அப்பாவுடன் சேர்ந்து ஏழு பேர் அண்ணன் தம்பிகள். அவர்கள் அனைவரும்  நீதி கட்சியில் சேர்ந்து அதன் கொள்கை பரப்புபவர்கள் ஆனார்கள். ஆனால் எனது தாத்தாவோ மிகப்பெரிய வைதீகர். 63 நாயன்மார்களில் ஒருவரான கலிய வாயனார் எங்கள் குலத்தை சேர்ந்தவர் என்று அதற்காக எங்கள் ஊரிலேயே ஒரு சிறிய மடம் அமைத்து ,அதை பராமரிக்க  நிலங்களும் ஒரு ஒரு குளமும் வெட்டியுள்ளார். அப்படிப்பட்ட வைதீகரான எனது தாத்தாவின் ஏழு மகன்களும் முதலில் அவருக்கு எதிராக கொடி பிடித்தனர். ஆகவே தனது பிள்ளைகள் மேல் வெறுப்புற்ற எனது தாத்தா ஏழு பேர்களையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி விட்டார். அதுமட்டுமல்லாமல் இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் வெளியேறலாம் .நானும் இந்த மடத்திலேயே தங்கி கொண்டு எனது காரியங்களை பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டார். அவர்களுக்கென்று தனது சொத்தின் ஒரு ஒரு பகுதியை ஒதுக்கி கொடுத்து விட்டார் .எனது பெரியப்பா தலைமையில் ஏழு பேரும் வெளியில் வந்து விட்டனர். பிழைக்க வழி இல்லை மிகவும் கஷ்டமான சூழ்நிலை அவர்கள் அவரவர்களு...